பொருள்: ஐம்புலனுக்குரிய நுகரும் பொருட்களில் எல்லாம் விருப்பு, வெறுப்புகள் மறைந்துள்ளன. அதன் பிடிக்குள் யாரும் சிக்கிவிடக் கூடாது. ஏனெனில் அவை மனிதனின் வளர்ச்சிப் பாதையில் இடையூறு விளைவிக்கும் எதிரிகளாகும். புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பயைால் கருவும் மறைக்கப்படுவது போல காமம் என்னும் தீயகுணத்தால் ஞானம் மறைக்கப்படுகிறது.