திருமணம் என்பது இருமனங்களை இணைக்கும் பந்தம். இது மகிழ்ச்சியும், குதுாகலமும் நிறைந்தது மட்டுமல்ல. ஆணும், பெண்ணும் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் தோழராகவும், துணைவராகவும் இருப்பதற்கான ஒப்பந்தம். இந்த பந்தத்திற்கு இறைவனும், படைப்பினங்களான மக்களும் சாட்சிகளாக இருப்பர்.
கணவன் அல்லது மனைவி தரப்பில் ஒப்பந்தத்தை மீறுவோர் மீது இறைவனின் கோபம் சீறிப்பாயும். அவர்களை நரகத்திற்கு உரியவர்களாக ஆக்கிவிடும். எனவே இறைவனுக்கு பயந்து செயல்படுங்கள். உறவுகளைச் சீர்குலைப்பதில் இருந்து உடனடியாக விலகுங்கள். கணவன், மனைவி உறவை பலப்படுத்துவதில் துணை நில்லுங்கள். இறைவனுக்கு அடிபணிந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் குடும்பத்தில் நிம்மதிக்கு குறைவிருக்காது.