பங்குனி மாத வளா்பிறையில் வருவது. இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிட்டுமாம். ஒரு கோதானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்றிருக்கும்பட்சத்தில், ஆயிரம் கோதானம் செய்தால் எவ்வளவு பலன் கிட்டுமென்று எண்ணிப் பாருங்கள்...ஆமலகி ஏகாதசியன்று ஒரு நெல்லிமரத்தடியில் பெருமாளைப் பிரதிஷ்டைசெய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து பூஜித்து வணங்கினால் மேற்கண்ட பலன்கள் கிட்டுமாம்.