ராமேஸ்வரம் : பங்குனி அமாவாசையை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 20 முதல் 31 வரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மூடப்பட்டது. இதனால் கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரைக்கு பக்தர்கள் நீராட வராமல் வெறிச்சோடியது. இந்நிலையில், நேற்று பங்குனி அமாவாசையை யொட்டி வெளியூரில் இருந்து பக்தர்கள் வராததால், அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்பணம் பூஜை செய்ய பக்தர்கள் யாரும் இன்றி வெறிச்சோடியது.