பதிவு செய்த நாள்
25
மார்
2020
03:03
வீரபாண்டி: கொரோனா வைரஸ் எதிரொலியாக, அரியானூர் மாரியம்மன் கோவில் திருவிழா, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரியானூர், மகாசக்தி மாரியம்மன் கோவிலில், பங்குனி திருவிழா, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22ல், சுய ஊரடங்கு கடைப்பிடித்ததால், அன்று நடக்கவிருந்த சத்தாபரண ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. மேலும், நேற்று மாலை முதல், வரும், 31 வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அதுவரை, திருவிழாவையொட்டி அறிவித்த திருவிளக்கு பூஜை, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரம், ஏப்., 1ல் சக்தி அழைத்தல், 2ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னி கரகம், பூங்கரகம், வண்டி வேடிக்கை உள்ளிட்டவை நடக்குமா என்பது குறித்து, அரசின் அடுத்த அறிவிப்புக்கு பின் முடிவு செய்யப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேபோல், வீரபாண்டி மாரியம்மன் கோவிலில், பங்குனி திருவிழா, ஏப்., 1ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதனால், அரசின் அறிவிப்பை பொறுத்து, திருவிழா நடத்துவது குறித்து முடிவெடுப்பதாக, அக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையம், முத்து முனியப்பன் கோவிலில், சில பக்தர்கள் மட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் விழாவை, 3 மணி நேரத்தில் முடித்துவிட்டு கலைந்தனர்.