பெண்ணின் பெருமை பற்றியும், அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் தெரிந்து கொள்வோமா... * அனைத்திலும் மேலான நன்மை தருபவர்கள் பெண்கள் மட்டுமே. நற்பண்புகள் நிறைந்த பெண்களைக் காட்டிலும் உயர்ந்தவர் உலகில் இல்லை. * உறவினர்களின் குடும்பத்தில் ஒழுக்கம் மிக்க பெண் இருந்தால் அவரைத் திருமணம் செய்யுங்கள். ஏழையாக இருந்தாலும் சரியே. ரத்தக்கலப்பிலுள்ள ஏழைப்பெண்ணை மணம் முடிக்காவிட்டால் குழப்பமும் பகையும் அதிகரிக்கும். * பக்தியும், ஒழுக்கமும் உள்ள பெண்ணை மனைவியாக அடைவதை விட சிறந்த பாக்கியம் வேறில்லை. கணவரின் கருத்தை ஏற்பதோடு அவனை மீறி நடக்காதவளாகவும் அவள் இருப்பாள். * பெண்களைக் கண்ணியமாக நடத்துமாறு இறைவன் ஆணையிடுகிறான். ஏனெனில் அவர்களே அன்னையராகவும், அருமைப் புதல்வியாகவும், அத்தையாகவும் இருக்கின்றனர். * பெண்களின் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர். முதலில் பார்க்கும் பார்வை இயல்பானது. ஆனால் இரண்டாம் முறை பெண்களின் மீது பார்வையைச் செலுத்துவதற்கு அனுமதி கிடையாது.. அது பெரும்பாவமாகும். * தொடர்பு இல்லாத அந்நிய பெண்களை வீணே பார்த்து ஆசைப்படும் ஆண்கள் மீதும், மற்ற ஆண்கள் தன்னைக் காணும் விதத்தில் அலங்காரம் செய்து திரியும் பெண்கள் மீதும் இறைவனின் கோபம், சாபம் ஏற்படும்.