* கைப்பொருளை இழக்கும் முன்பாக தர்மத்திற்காகச் செலவழியுங்கள். * கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும். * அண்டை வீட்டாரை அலட்சியம் செய்யாதீர். நற்பலனை இழந்து விடுவீர்கள். * குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழப்பீர்கள். * மரணம் வரும் முன்பாக நற்செயலில் விரைந்து ஈடுபடுங்கள். * சண்டை சச்சரவுகளை சமாதானம் செய்வதில் அக்கறை காட்டுங்கள். * கல்விக்கும் அழிவில்லை. அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை. பொன்மொழிகள்