சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் முற்பிறவியில் செய்த பாவமே. இவர்களை யோகக்கட்டைகள் என்று கேலி செய்வர். முற்பிறவியில் நல்வினை இருக்குமானால், இப்பிறவியில் எப்போதும் வெற்றியே கிடைக்கும். அதுவே எதிர்மறையாக அமைந்து விட்டால் எதை செய்தாலும் தடங்கல் குறுக்கிடும். இதை ஒரு எளிய பரிகாரத்தால் சரி செய்யலாம். ராமாயணத்தை ஹிந்தியில் ராமசரித மானஸ் துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும் ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொன்னால் போதும். பந்தௌ நாம ராம் ரகுபர் கோ! ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!! பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ! அகுண அனுாபம் குண நிதான் ஸோ!! இதைச் சொல்ல முடியாதவர்கள் அதன் பொருளை மட்டும் சொல்லலாம். ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாம் உன் நாமத்தில் அடங்கியுள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் ராமநாமத்தில் இருக்கின்றன. வேதத்தின் உயிர் நாடியாகவும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராம நாமத்தை போற்றுகிறேன்” இதற்காக விரதம் இருக்க தேவையில்லை. தொடர்ந்து ஜபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கும். தொட்டது துலங்கும்.