பதிவு செய்த நாள்
26
மார்
2020
02:03
திருப்போரூர் : பஞ்சந்திருத்தி கிராமத்தில், கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, வீடுகளில், வேப்பிலை கட்டி மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர். திருப்போரூர் அடுத்த, பஞ்சந்திருத்தி கிராமம், பிள்ளையார் கோவில் தெரு, பகத்சிங் தெருக்களில், 50 வீடுகளில், 300 பேர் வசிக்கின்றனர்.தற்போது, கொரோனா வைரசில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, மேற்கண்ட கிராம மக்கள், தங்கள் வீடுகளில், பழைய நடைமுறையை கடைபிடித்துள்ளனர். அவரவர் வீடுகளில், வேப்பிலையை கட்டி, வீடு முழுதும் மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர்.வீடுகளில் அதிகாலை, மாலை வேளைகளில், சாம்பிராணி மற்றும் வேப்பிலை புகை போடுகின்றனர்.