தேவகோட்டை:தேவகோட்டைசமயபுரம் மாரியம்மன்கோயில் பங்குனி உற்ஸவம் காப்புக்கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. தினமும்அம்மன்அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார்.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகத்தினை தொடர்ந்து தினமும் காமாட்சி,லலிதாம்பிகை உட்பட சிறப்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.அரசின் வேண்டுகோளை ஏற்று பக்தர்கள் அதிகாலையிலேயே ஆரவாரம் இல்லாமல்அமைதியாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.பறவை காவடி எடுத்தல் தீ மிதித்தல் ரத்து செய்யப்பட்டது.