பதிவு செய்த நாள்
26
மார்
2020
03:03
ஆத்தூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஆத்தூர், பெரியமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆத்தூர், பெரியமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, வரும், 30ல், கும்பாபி?ஷகம் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. ஆனால், 144 தடை உத்தரவால், கும்பாபி?ஷகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளை, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, கோவில் நிர்வாக குழு, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்து, கோவில் முன், நோட்டீஸ் ஒட்டியுள்ளது.