சென்னை :கிராமக் கோவில் பூஜாரிகளின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய முதல்வர்பழனிசாமிக்கு கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. பேரவையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்,அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி அறிக்கை:கிராமக் கோவில் பூஜாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாதாந்திர ஓய்வூதியத்தை 4000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாகஉயர்த்த வேண்டும் என சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை சமீபத்தில் திருச்சிக்கு வந்த முதல்வர் பழனிசாமியிடம் ஆர்.ஆர். கோபால்ஜி நேரில் வழங்கினார்.இதைத் தொடர்ந்து பூஜாரிகளின் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதியின்படி பூஜாரிகளுக்கு நல வாரிய உதவி,குறைந்தபட்சம் 5000 ரூபாய் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.