கோவில்களில் பக்தர்களுக்கு தடை: தினமும் நடக்கிறது 4 கால பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2020 01:03
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் தினமும் நான்கு கால பூஜை தடையின்றி நடக்கிறது.
கொரோனா நோய்தொற்று ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தினமும் 4 கால பூஜைகள் மட்டும் தடையின்றி நடந்து வருகிறது. பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் அர்ச்சகர் மட்டும் உள்ளே சென்று சுவாமிக்கு பூஜை செய்கின்றார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், வீரனாட்டேஸ்வரர், ஆதி திருவரங்கம் அரங்கநாதர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்பட அனைத்து கோவில்களிலும் தினமும் 4 கால பூஜை முறையாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், குலதெய்வ வழிபாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. திருமணநாள், பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் கோயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு செல்கின்றனர்.