பதிவு செய்த நாள்
29
மார்
2020
03:03
பொள்ளாச்சி:ஜமீன் ஊத்துக்குளியில், கொரோனா பரவலை தடுக்க, மக்கள் தங்கள் வீடுகளில் வேம்பு இலையை கட்டி வைத்து, வீட்டுக்கு முன் மஞ்சள் கரைசல் தெளித்து வருகின்றனர்.இந்நிலையில், ஜமீன் ஊத்துக்குளி இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமம் முழுவதிலும் மஞ்சள் நீர் தெளிக்க திட்டமிட்டனர். அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தண்ணீர் பெற்று பேரல்களில் நிரப்பினர். ஊரினுள் இருக்கும் வேம்பு இலைகளை சேகரித்து அவற்றை அரைத்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து பேரலில் கரைசலை நிரப்பினர்.நேற்று முன்தினம், செல்லமுத்து நகர், ராமநாதபுரம் காலனி, த.கி.புதுார் ரோடு உள்பட, 13க்கும் மேற்பட்ட வீதிகளில், கிராமம் முழுவதிலும் தெளித்தனர். மக்களுக்கும் வினியோகித்தனர். தொடர்ந்து இரு நாட்களுக்கு ஒரு முறை, கிருமி நாசினி தெளிக்க திட்டமிட்டு உள்ளனர்.