பதிவு செய்த நாள்
31
மார்
2020
03:03
அரூர்: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, கிராம பகுதி தெருக்களில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை இளைஞர்கள் தெளித்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., மேல்பாட்சாபேட்டையில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை தெருக்களில் தெளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: மஞ்சள் மற்றும் வேப்பிலை மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவது, அறிவியல் ரீதியாக நீருபணம் ஆகியுள்ளது. எனவே, நோய் தொற்றிலிருந்து எங்கள் தெரு மக்களை பாதுகாக்கும் வகையில், இங்குள்ள அனைத்து மதத்தை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பாக, தெரு முழுவதும், மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை தெளித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.