பதிவு செய்த நாள்
31
மார்
2020
03:03
திருப்போரூர் : திருக்கழுக்குன்றத்தில், இளைஞர்கள் ஒன்றிணைந்து, தெருக்களில், மஞ்சள் கலந்த நீர் தெளித்தனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பெரிய தெருவில், குயவர் வீதி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க முடிவு செய்தனர்.அதன்படி, பெரிய பேரல் ஒன்றில், நீருடன் மஞ்சள், வேப்பிலையை அரைத்து கலந்து தயார்படுத்தி, மூன்று சக்கர மிதிவண்டியில் வைத்தனர்.பின், வேப்பிலை மூலம், மஞ்சள் கலந்த நீரை, தெருக்களின் சாலைகள், வீடுகள், கழிவு நீர் கால்வாய் பகுதிகளில், இளைஞர்கள் தெளித்தனர்.