தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரை என மூன்று மனைவியர். இதில் ராமனின் தாயான கோசலையும், பரதனின் தாயான கைகேயியும் பட்டாபிஷேக விஷயத்தில் நேரடியாகப் பங்கேற்றவர்கள். ஆனால் சுமித்ரை தன் பிள்ளைகளான லட்சுமணனை ராமனுக்கு உதவியாகவும், சத்ருக்கனனை பரதனுக்கு உதவியாகவும் அனுப்பினாள். காட்டிற்கு புறப்பட இருந்த மகனிடம், ‘‘லட்சுமணா! ராமனுக்குத் தம்பி என்ற உரிமை எடுக்காதே. ஒரு வேலைக்காரன் போல் இரு” என அறிவுரை கூறினாள். தன் பிள்ளைகளுக்கு பதவி ஆசை காட்டாமல், ஞானியாக வாழ்ந்த சுமித்ரை ‘தெய்வத்தாய்’ என்றால் மிகையில்லை.