* பணவசதியைக் கடவுள் கொடுத்ததாகக் கருதி, செல்வந்தர்கள் தர்மம் செய்ய வேண்டும். * இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்பவனே புத்திசாலி. * சண்டையிடாதீர்கள். அனைவரிடமும் சமாதானத்துடன் வாழுங்கள். * உதவி கேட்டு நிற்பவரை நாய் போல குரைத்து விரட்டத் தேவையில்லை. நாலு வார்த்தையாவது அன்புடன் கூறுங்கள். * இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுங்கள். * கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி காண்பீர்கள். * தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும். * கள்ளம் கபடம் அற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள். * பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள். கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள். * அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள். இலவசமாக கிடைக்கும் எதையும் வாங்காதீர்கள். * புறக்கணிப்பவனிடமும் கோபம் வேண்டாம். அமைதியுடன் விட்டுக் கொடுங்கள். * யாரையும் பகைவனாக கருத வேண்டாம். உலகிலுள்ள அனைவரும் கடவுளின் பிள்ளைகளே. * ஆடம்பர நோக்கில் செலவு செய்யாதீர்கள். முடிந்தால் தேவையைக் கூட குறையுங்கள். * கவுரவம் என்ற பெயரில் வழிதவறாதீர்கள். கடவுளைப் பணிவதே உண்மையான கவுரவம். * எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். உணவு, உடையில் ஆடம்பரம் கூடாது. * நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆழ்மனம் கடவுள் மட்டுமே சிந்திக்க வேண்டும். * சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையுடன் பேணுங்கள்.