‘‘நாம் மட்டுமே துன்பத்தால் வாடுகிறோம். உலகிலுள்ள மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என நினைப்பது கூடாது. துன்பம் கண்டு துவளாமல் அதை எதிர்கொள்ளும் சக்தியை பெறுவதற்காக தொழுகையில் ஈடுபட வேண்டும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலோ, பயத்தை உருவாக்கும் சம்பவங்கள் நடந்தாலோ நாயகம் தொழுகை செய்ய விரைந்து செல்வார். துன்பத்தில் வாடுவோரிடம் ஆறுதல் சொல்வது அவசியமானது. துன்பமடைந்தவர் எவ்வளவு நன்மை அடைந்தாரோ அதற்கு சமாமான நன்மை ஆறுதல் சொன்னவருக்கும் கிடைக்கும்.