பதிவு செய்த நாள்
03
ஏப்
2020
02:04
வேலூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்கவும், உலக நன்மை வேண்டியும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், அறநிலையத்துறை சார்பில், நான்கு கோவில்களில் தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஏப்.,1 முதல், 14 வரை, நான்கு கோவில்களில் தினமும் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் மற்றும் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் உள்ள மூலவருக்கு மஞ்சள் நீர் அபி ?ஷகம், இளநீர் அபி?ஷகம், அஷ்டோத்திர நாமாவளி சீதளாதேவி ?ஹாமம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், சஹஸ்ரநாம அர்ச்சனை, திருப்பத்தூர் தருமராஜா கோவிலில் துளசி பூஜை, அஷ்டோத்தர நாமாவளி, திருமஞ்சனம், சஹஸ்ரநாம அர்ச்சனை, குங்கும அர்ச்சனை நடத்தப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும் வரும், 14 வரை தினமும், வில்வ அர்ச்சனை நடக்கிறது.