மதுரை : மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்று (2.4.2020) ராம நவமி விழா, உலக மக்களின் நலனிற்காக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றன. இதில் கோயிலில் தங்கி சேவை செய்யும் முழு நேர இஸ்கான் பக்தர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஸ்ரீராம நவமி சிறப்பு பூஜைகள் அதிகாலை 4.45 மணி முதல் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், பஞ்ச மஹா ஆரத்தி, துளசி வந்தனம், நரசிம்ம பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா-மதுராபதி, ‘‘ஸ்ரீஸ்ரீசீதா-ராமர் அலங்காரத்தில் ‘ஸ்ரீராம தனுசு (வில்) ஏந்தி அருள்பாலித்தனர். ஸ்ரீராம நாமம் அடங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபமும், பஜனையும் நடைபெற்றது. இஸ்கான் தலைமையகத்தின் அறிவுரையின் படி, விழாவில் பங்கேற்க, கோயிலில் சேவை செய்யும் முழு நேர இஸ்கான் பக்தர்களை தவிர, வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.