Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: அள்ளித் தருவார் ஒன்பதாம் ... கடகம்: அமோக வாழ்வு தருவார் ஆறாமிடத்து சனி கடகம்: அமோக வாழ்வு தருவார் ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2023 முதல் 13.4.2024 வரை)
மிதுனம்: சோதனை தீர்க்கும் சாதனைக் காலம்
எழுத்தின் அளவு:
மிதுனம்: சோதனை தீர்க்கும் சாதனைக் காலம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
05:04

மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!


சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன வேதனை, நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். வீண் விரோதத்தை உருவாக்குவார். ஆனால் அவரது 7ம்பார்வை சிறப்பாக இருப்பதால் பின்னடைவு ஏற்படாது. எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.  உங்களது ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஜூலை 7 முதல்  நவ.13 வரை குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்வார் குருபகவான்.  சுபநிகழ்ச்சியை தருவார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். பணியில் உயர்வை தருவார்.


  சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். இந்த பொதுவான பலனைக் கண்டு அஞ்ச வேண்டாம். டிச. 26க்கு பிறகு அவரால் முயற்சிகளில் தடைகள் உருவாகலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

 ராகுவால் வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ஆக.31க்கு பிறகு அவர் பணவிரயத்தையும், துாரதேச பயணத்தையும் கொடுப்பார். கேதுவால் மனைவி வகையில் பிரச்னை, வீண் மனவேதனை ஏற்படலாம். ஆக.31க்கு பிறகு பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு,மனை, வாங்கும் யோகம் உண்டு. மொத்தத்தில் இந்த ஆண்டு சோதனைகளைத் தாண்டி சாதனை படைக்கும் ஆண்டாக அமையும்.


வீ்ட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய விஷயங்களை பெரியோரின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 7க்கு பிறகு அனுகூலமான காலகட்டம். மனதில் உற்சாகம் பிறக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.


பெண்கள் பொறுமையுடன் விட்டுகொடுப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. ஜூலை 7க்கு பிறகு  தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். ஆக.31க்கு பிறகு  ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். உடல்நிலை சீராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.


 சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை7க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். பணவரவுக்கு பஞ்சம் இருக்காது.  வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் சிறப்படையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.
* வியாபாரிகளுக்கு ஆக.31க்கு பிறகு பணம் விரயம், மாயம் போன்ற சம்பவங்கள் இருக்காது. பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம்,  உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும்.  பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் அனுகூலம் தரும்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஜூலை 7க்கு பிறகு எதிர்பாராத பணம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
* அரசு பணியாளர்கள் ஆக.31க்கு பிறகு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* தனியார் துறையினருக்கு ஜூலை 7 முதல்  நவ. 13 வரை வேலையில் ஆர்வம் ஏற்படும். உங்கள் திறமை பளிச்சிடும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப்பெறலாம்.
* ஐ.டி., துறையினர் ஜூலை 7க்கு பிறகு பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு சாதகமான காற்று வீசும். வேலைப்பளு குறையும்.
* மருத்துவர்களுக்கு ஆக.31க்கு பிறகு தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
* வக்கீல்கள் ஜூலை 7 முதல் நவ.13வரை தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் ஜூலை 7க்கு பிறகு  எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆக.31க்கு பிறகு தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். சகபெண் ஊழியர்கள் மிக ஆதரவுடன் இருப்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்கு பிறகு சாதகமான காற்று வீசும். புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
* கலைஞர்கள் ஜூலை 7க்கு பிறகு மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  காரியத்தடை, பொருள்நஷ்டம், அவப்பெயர்  முதலியன மறையும். உங்களின் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுனையாக இருப்பர்.
* விவசாயிகள் ஆக. 31க்கு பிறகு நெல், மஞ்சள், பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர்.
ஆக.31க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.  

* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குருவின் பார்வை பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது.  ஜூலை 7க்கு பிறகு சிறப்பான பலனைக் காணலாம்.  போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கப் பெறுவர்.


சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். சிலர் அரசின் கெடுபிடிக்கு ஆளாகலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை.
* வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். பணவிஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். சிலருக்கு வெளியூர் பயணம் அனுகூலத்தைக் கொடுக்காது.
* தனியார் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். நவ.13க்கு பிறகு முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது.

* ஐ.டி. துறையினர் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.    


பரிகாரம்
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள்தீபம்
* வியாழனன்று குருபகவான் தரிசனம்
* பவுர்ணமியன்று அம்மனுக்கு விளக்கு

 
மேலும் தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2023 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி: சாதனை படைப்பீர்கள்எடுத்துக் கொண்ட செயலில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய ... மேலும்
 
temple news
கார்த்திகை: தடைக்கல்லும் படிக்கல்லாகும்நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உற்சாக மனப்பான்மைஉண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டும் மிருகசீரிட ... மேலும்
 
temple news
புனர்பூசம்: கூர்மையான தராசு என்பதற்கேற்ப புத்தி யோசனையுடனும் அதே வேளையில் கவர்ச்சியாகவும் பேசி ... மேலும்
 
temple news
மகம்: காத்திருக்கு பதவி உயர்வுநிதானமுடன் செயல்பட்டால் நினைத்ததை எல்லாம் அடைய முடியும் என இருப்பதைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar