குருத்தோலை ஞாயிறு: தேவாலயம் வாசல் முன்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2020 02:04
காரைக்கால்: காரைக்காலில் கொரோனா வைரஸ் எதிரொலியாக தேவாலயங்கள் அடைக்கப்பட்டதால், குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு கிறிஸ்துவ மக்கள் தேவாலயம் வாசல் முன்பு பிரார்த்தனை செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மத்திய.மாநில அரசு 21 நாட்கள் பொது மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோவில். பள்ளிவாசல்.தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியில் வந்து பின் வீடு திரும்பி வருகின்றனர்.மேலும் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம். பிரமோற்சவ விழா, கந்தூரி விழா உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட் டுள்ளது. இதனால் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் குருத்தோலைகளை வைத்து பிரார்த்தனை செய்தனர்.மேலும் ஒரு சிலர் காரைக்கால் புனித தேற்றவு அன்னை ஆலயம் வாசல் முன்பு குருத்தோலையை கையில் வைத்துக் கொண்டு ஒருவருக் கொருவர் இடைவெளிவிட்டு பிரார்த்தனை செய்து பின் வீடு திரும்பினர். இதுபோல் கிருஸ்துவ மக்கள் தங்கள் வீடுகளில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.