பரமக்குடி:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பரமக்குடி நகராட்சியில் தெருக்களில் மஞ்சள் நீர் தெளிக்கும் பணி நடந்தது.
பரமக்குடியில் நகராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் தொடர்கிறது. பரமக்குடி நகர் பகுதிகளில் கிருமி நாசினியான மஞ்சள் கலந்த நீர் தெளிக்கும் பணி நடந்தது. பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் வின்சென்ட் ராஜா உள்ளிட்டோர் தெருக்களில் மஞ்சள் நீர் தெளித்தனர். நகர் ஜெ., பேரவை செயலாளர் வடமலையான், நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து வார்டுகளிலும் தினமும் மஞ்சள் நீர் தெளிக்கும் பணி நடை பெறும், என தெரிவிக்கப்பட்டது.