Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல ... கோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை கோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு
எழுத்தின் அளவு:
நோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
11:04

 பல்லடம்: கொடிய நோயான  கொரோனா வைரஸில் இருந்து காக்க வேண்டும் என, பல்லடம் அருகே, மாரியம்மனை நினைத்து கும்மி ஆட்டம் ஆடி வழிபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன்மிகம் சார்ந்த பலரும், கொடிய நோயான கொரோனாவை விரட்ட, பல்வேறு வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் மங்கை வள்ளி கும்மி ஆட்ட கலை குழுவினர், பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் தனியார் தோட்டத்தில், நேற்று ஒன்று கூடினர். கோவில் விழாக்களில் கலை நிகழ்ச் சி நடத்தி வரும் அவர்கள், நேற்று நோயில் இருந்து காக்க வேண்டும் என, மாரியம்மனை நினைத்து வழிபட்டு கும்மி ஆட்டம் ஆடினர்.

அதில், கொடிய நோயும் இந்த கொரோனா கொழுந்து விட்டு எரியதுங்க, கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டமாக நாம் சேர வேணாம். வெளியே போகும் போது கண்டிப்பாக முக கவசம் போட வேணும், அரசு போடும் சட்டங்களை நாம் ஆதரிக்க நடக்க வேணும். குழந்தை குட்டி எல்லோருமே விட்டுக் கொண்டே இருக்க வேணும், இந்த கொடிய நோயிலிருந்து எங்களை காக்க வேணும் மாரியம்மா. உன்ன விட்டா எங்களுக்கு வேறு வழி இங்கே ஏதம்மா என்ற பாடல் வரிகளுடன், கும்மி ஆட்டம் ஆடி மாரியம்மனை வழிபட்டனர். அனைவரும், முக கவசம் அணிந்த படி, சமூக இடைவெளியை பின்பற்றியவாறு, கும்மி ஆட்டம் ஆடினர். அது குறித்து கலைக்குழுவினர் கூறுகையில், விழாக்களின் தான் நாங்கள் வழக்கமாக கும்மி ஆட்டம் ஆடுவோம். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், மாரியம்மனை வேண்டி இக்கும்மியாட்ட பாடலை அம்மனுக்கு சமர்ப்பித்தோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar