சாத்துார்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கடைசி வெள்ளி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.நத்தத்துப்பட்டி, என் .மேட்டுப்பட்டி, கே. மேட்டுப்பட்டி, பண வன்னிமடை, போத்தி ரெட்டிபட்டி, நீராவி பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மேளதாளத்துடன் முளைப்பாரி எடுத்து வந்து கோவில் முன்பு பொங்கலிட்டு, அக்னிசட்டி எடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். தமிழகத்தில் 144 தடை உத்திரவு காரணமாக அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 10 ம் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடை பெறுவதாக இருந்த, திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் உதவி ஆணையர் கருணாகரன் அறிவித்துள்ளார்.