திருப்பரங்குன்றம்: கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவும், மேலும் பரவாமல் தடுக்கவும், உலக அமைதிக்காகவும் மதுரையில் யோகி ராமலிங்கம் 21 நாட்கள் தியான தவ வேள்வியை துவக்கினார்.
தனக்கன்குளம் சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் யோகாசன சங்க பொதுச் செயலாளர் யோகி ராமலிங்கம் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் இந்த வேள்வி யை துவக்கினார்.அவரது மகள் ராஜராஜேஸ்வரி கூறியதாவது: தனி அறையில் ஏப்., 26 இரவு 9:00 மணி வரை தியானத்தில் அமர்ந்திருப்பார். தினம் ஒருவேளை தண்ணீர் மட்டும் அருந்தி, ஆகாரம், துாக்கிமின்றி தியானம் மேற்கொண்டுள்ளார். 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. ஏற்கனவே சுனாமியின் போதும் இதுபோன்று 365 மணிநேரம் தியான வேள்வியை மேற்கொண்டார். இந்த ஊரடங்கில் தினமும் 2 வேளை மக்கள் 21 நிமிடம் தியானம் செய்யலாம். தியானத்தை காட்டிலும் சிறந்த ஆயுதம் இல்லை, என்றார்.