பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
03:04
வெள்ளை மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!
குருவின் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் மே3ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் மே 3 வரை சாதகமாக இருந்து நற்பலன் தருவார். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதனால் ஏற்பட்ட பிரச்னை ஏப்.18க்கு பிறகு மறையும். அதன் பிறகு குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் விலகும். மே 3க்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். தேவைகள் பூர்த்தியாகும். தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடையிருக்காது. மே 3க்குள் புதிய பதவி தேடி வரும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. செவ்வாயால் மே 3க்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தனியார் துறை பணியாளர்களுக்கு குருவால் அலைச்சல், வேலைப்பளு குறையும். புதிய பதவி கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடை இருக்காது.
* மருத்துவர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். மறைமுகப் போட்டி குறையும்
* ஆசிரியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பகைவர் தொல்லை விலகும்.
* போலீஸ், ராணுவத்தினர் நல்ல வளர்ச்சி காண்பர். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு மே 3க்குள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். புகழ், பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
* விவசாயிகள் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் மே 3க்குள் நிறைவேறும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
* மாணவர்கள் குரு சாதகத்தால் நற்பலன் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பெண்கள் வகையில் தொல்லை வர வாய்ப்புண்டு. எதிரி பிரச்னை தலைதுாக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
* வியாபாரிகளுக்கு மே4க்கு பிறகு பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.
* அரசு பணியாளர்கள் வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். மே 4க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்.
* தனியார் துறை பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர்.
* ஐ.டி., துறையினர் ஏப்.18 முதல் மே4 வரை முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* மருத்துவர்கள் மே 3க்கு பிறகு வேலைப்பளுவைச் சந்திப்பர். அதிக முயற்சி எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு ஏப்.18ல் இருந்து மே 4- வரை செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
* விவசாயிகள் கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும்
நல்ல நாள்: ஏப்.14,15,16,17,20,21,22,25,26, மே 1,2,3,4,5,10,11,12,13
கவன நாள் மே 8,9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3,6
பரிகாரம்:
* திங்கட்கிழமையில் சிவாலய தரிசனம்
* சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்