* வாழ்வில் உயர வேண்டுமானால் தேனீ போல உழைக்க தயாராகுங்கள். சுறுசுறுப்புடன் நற்செயலில் ஈடுபடுங்கள். * சிரித்த முகம், நேர் கொண்ட பார்வையுடன் நடை போடுங்கள். இனிமை, நன்மை தரும் சொற்களையே பேசுங்கள். * இளகிய தங்கத்தில் ரத்தினம் ஒட்டிக் கொள்வதைப் போல, மனம் பக்தியில் ஒன்றினால் கடவுள் அருள் கிடைக்கும். * குடும்பம் என்னும் மரத்தில் மனைவி வேராகவும், கணவன் அடிமரமாகவும் இருக்க வேண்டும். அதில் அன்பு என்னும் இலைகள் வளர்ந்து, ஒற்றுமை என்னும் கனியைப் பறிக்க வேண்டும். * கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கி எரியும் தீ போல, எந்த சூழலிலும் உயர்ந்த சிந்தனை கொண்டவராக இருங்கள். * சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். வளைந்து நிமிர்ந்து வேலை செய்தால், உடல் பலத்தோடு அறிவுத் தெளிவும் உண்டாகும். * நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள். அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கடைபிடியுங்கள். * குடும்பத்தினர் ஒன்றாக கூடி தினமும் கடவுளை வழிபடுவதால் எல்லாவித நன்மையும் கிடைக்கும். * ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை. பக்தியோடு கொடுக்கும் எளிமையான பூவும், நீருமே போதுமானது. - வழிகாட்டுகிறார் வாரியார்