பதிவு செய்த நாள்
12
மே
2020
05:05
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை கொடுப்பார். சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவரால் பண வரவு கூடும். சொந்த பந்தங்களின் வருகை அதிகரிக்கும். குடும்பத்தில் சூரியன், புதனால் மதிப்பு, மரியாதை கூடும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும்.
குரு குடும்பத்தில் குதுாலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். தனுசு ராசியில் இணைந்திருக்கும் சனி, கேதுவால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை ஏற்படும். உங்களின் ஆற்றல் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், ஆரதவையும் பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஜுன் 4க்கு பிறகு பெற்றோர் வீட்டில் இருந்து பொருள் வரப் பெறலாம். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.
உடல்நிலை சிறப்பாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவர். மே4 க்கு பிறகு உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டிய திருக்கும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பணவரவுக்கு பஞ்சமிருக்காது. அமோக லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக ஆதாயம் அடைவர்.
* வியாபாரிகள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வர். தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுணர்டவன் செயல்படுவர். அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் அதிக வருமானத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறுவர். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். இடமாற்ற பீதி மறையும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் சிறப்பான பலன்களைக் காண்பர். கோரிக்கைகளை மே 24க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* மருத்துவர்களுக்கு வேலைப்பளு குறையும். வேலையில் திருப்தியுடன் ஈடுபடுவர். யாருடைய உதவியையும் நாடாமல் சாதனை படைப்பர்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு கடந்த கால உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
* அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சி காண்பர். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* பொதுநல சேவகர்களுக்கு பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடை, நஷ்டம் முதலியன ஜுன் 4 க்கு பிறகு மறையும். அதன்பின் சிறப்பான பலனை பெறலாம். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் மஞ்சள், பயறு வகைகள், நெல், எள், கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை , தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக மகசூல் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
* பால்பண்ணை தொழில்புரிவோர் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
* பள்ளி ,கல்லூரி மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மே 24க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும்.
நல்ல நாள்: மே 14,20,21,22,23,24,27,28,31 ஜுன் 1,7,8,9,10
கவன நாள்: மே 15,16 ஜுன் 11,12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3,7 நிறம்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்:
* பவுர்ணமியின்று அம்மனுக்கு மாவிளக்கு
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
* வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு நெய்தீபம்