* ஆற்றுநீர் போல் ஒரே திசை நோக்கி பயணிக்கும் நல்லவன் லட்சியத்தை அடைவான். * உலகில் பணம்தான் முக்கியம். பணத்தால் தான் உலகமே இயங்குகிறது. * இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை. * வளர்ச்சியும், வீழ்ச்சியும் மனிதனுக்கு நாக்கைப் பொறுத்தே அமைகிறது. * வறுமை, நோய், துன்பம் எல்லாம் அவரவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள். * உறவினரைக் கஷ்ட காலத்திலும், நண்பனை ஆபத்து நேரத்திலும், மனைவியை நோயில் வாடும் போதும் அவரவர் உண்மையான குணத்தை அறிய முடியும். * முட்டாள்தனமான செயல்கள் மனதிற்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும். * மனதில் நினைப்பதை வெளியே சொல்லாமல் நிறைவேற்றுபவனே வெற்றியாளன். * சிறிது சிறிதாக படித்தால் கூட முட்டாளும் அறிவாளியாக மாறுவான். * எப்போதும் பிறந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணால் குடும்ப அமைதி கெடும். * சிறந்த ஆலோசனை சொல்லும் அமைச்சர் இல்லாத அரசு சீக்கிரமே நஷ்டமாகும். * கடவுள் அருள் இல்லாவிட்டால் சிறிய செயலைச் செய்வது கூட பெரும்சவாலாக இருக்கும். * அரசர், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் ஆகியோரோடு வாக்குவாதம் செய்யக் கூடாது. * பயமும், தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். * அறிவு மட்டுமல்ல... குடும்பம், உறவு, நண்பர்களையும் மதுவால் இழக்க நேரிடும். * செயல் சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும் அதை முடிக்க முழுசக்தியை பயன்படுத்துவது அவசியம். * சாந்தமான மனம் இருந்தால் எப்போதும் சந்தோஷமாக வாழ முடியும்.