அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனை ஸ்டான்ஸ்டன் என்பவர் விமர்சித்துக் கொண்டே இருந்தார். அமைதியாக இருந்த லிங்கன் ஒருநாள் ஸ்டான்ஸ்டனை அழைத்தார். ‘‘உங்கள் விமர்சனங்கள் என் ஆட்சியை வழிநடத்த மிகவும் உதவின. என்னை நீங்கள் ‘மனிதக்குரங்கு’, ‘கீழ்த்தரமானவன்’, ‘கிறுக்கன்’ என்றெல்லாம் விமர்சித்து இருந்தீர்கள். இது எல்லாமே உண்மையே. இப்போது நான் போர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதிபுத்திசாலியான நீங்கள் எனது அமைச்சரவையில் இடம் பெற வேண்டும். சாதாரண பதவியல்ல. நீங்களே ராணுவ அமைச்சராக இருந்து போர்வீரர்களை வழி நடத்த வேண்டும்”என்றார். அந்த நபருக்கு தலை சுற்றியது. விமர்சனங்களைத் தாங்கும் பக்குவத்துடன், தன்னையே அமைச்சராகவும் நியமித்த லிங்கனின் அன்பை எண்ணி வியந்தார். அமைச்சரவையிலும் பொறுப்பேற்றார். லிங்கன் இறந்ததும் தேம்பித் தேம்பி அழுத அந்த அமைச்சர், “உலகம் தோன்றிய நாளில் இருந்து லிங்கனைப் போல் அருமையான, அன்பான ஆட்சியாளர் இருந்ததில்லை,” என்றார். எதிரிகளைக் கூட மாற்றும் சக்தி அன்புக்கு இருக்கிறது.