வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட்டில், துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் உள்ளது.இந்நிலையில், நேற்று முன் தினம் கோவில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் தலைவர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடுகின்றனர்.