பதிவு செய்த நாள்
27
மே
2020
12:05
கோவை : கோவில்களை திறக்க கோரி, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணியினர் கோவில்களின் முன், சமூக இடைவெளி விட்டு, தோப்புக்கரணம் போட்டனர். அன்னூரில் மன்னீஸ்வரர் கோவில் முன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குட்டி தலைமையில், தோப்புக்கரணம், பிரார்த்தனை போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி தலைமையில், கஞ்சப்பள்ளி, தேனீஸ்வரர் கோவிலிலும், ஒன்றிய தலைவர் மாரப்பன் தலைமையில், எல்லப்பாளையம், பழனியாண்டவர் கோவில் உட்பட, ஆறு கோவில்களில், போராட்டம் நடந்தது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், காலகாலேஸ்வரர் கோவில் முன், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் தலைமையில், தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடந்தது.l குறிச்சி பொங்காளியம்மன், வெள்ளலூர் தேனீஸ்வரர், ஈச்சனாரி விநாயகர், ஜி.டி., டேங்க் விநாயகர், குனியமுத்தூர் தர்மராஜா, அறம் வளர்த்த மாரியம்மன், ஐயப்பன் கோவில்கள் முன் தலா, நான்கு பேர் தோப்புக்கரணம் போட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.l மதுக்கரையில் அறிவொளி நகர், மதுக்கரை மார்க்கெட், குவாரி ஆபீஸ் உட்பட, ஆறு இடங்களிலும், க.க.சாவடியில் குமிட்டிபதி உட்பட, 10 இடங்களில் தோப்புக்கரண ஆர்ப்பாட்டம் நடந்தது.
l தொண்டாமுத்தூர்ஒன்றிய இந்து முன்னணியினர், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில், அரங்கநாதர் கோவில், பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி, தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோவில், உலியம்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் முன், கற்பூரம் ஏற்றி, தோப்புக்கரணமிட்டனர்.l மேட்டுப்பாளையம் நகரில், கோவை இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில், சக்தி விநாயகர் கோவிலில் சூடம் ஏற்றி, தோப்புக்கரணம் போராட்டம் நடந்தது.
வனபத்ரகாளியம்மன் கோவில், சுப்பிரமணியர் கோவில், மைதானம் மாரியம்மன் கோவில், மைக்கேல் மாரியம்மன் கோவில், எஸ்.எம்.நகர் மாதேஸ்வரன் கோவில் உட்பட, 7 இடங்களில் தோப்புக்கரணம் போராட்டம் நடந்தது.lகாரமடையில் அரங்கநாதர் கோவில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில், ஐயப்பன் கோவில் உட்பட, 12 கோவில்களிலும், சிறுமுகையில் ஆறு கோவில்களிலும், இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி, தோப்புக்கரணம் போராட்டம் நடத்தினர்.l கருமத்தம்பட்டியில், இ.மு., சார்பில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நேற்று நடந்தது. கோவை மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், பல தொண்டர்கள் பங்கேற்றனர்.--நமது நிருபர் குழு-