கிருஷ்ணகிரி மாவட்டம், அத்தி முகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் உள்ள சிவலிங்கத்தில் யானை முகம் இருக்கிறது. விருத்தாசுரன் என்ற அசுரனை அழித்ததால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த இந்திரன், தன் வாகனமான யானையுடன் இங்கு சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இதன் அடிப்படையில் இங்கு லிங்கத்தில் யானை முகம் இருக்கிறது. இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை சம்ஹார தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கின்றனர்.