நாமக்கல்: நாமக்கல், மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி சஷ்டியை முன்னிட்டு, சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.