பதிவு செய்த நாள்
29
மே
2020
08:05
மதுரை : மதுரை மாவட்டம், தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில், நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா, சிறப்பு அலங்கார வழிபாடு சங்கர லிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் சுவாமி, கோமதி அம்மனுக்கு நடைபெற்றது.
உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் யாருக்கும் அனுமதியின்றி பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்கவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.