பதிவு செய்த நாள்
30
மே
2020
09:05
நாமக்கல்: வைகாசி சஷ்டியை முன்னிட்டு, நாமக்கல் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று, நாமக்கல் பகுதி முருகன் கோவில்களில் பக்தர்கள் யாரையும் அனுமதிக்காமல், வைகாசி மாத சஷ்டி விழா கொண்டாப்பட்டது.
* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு அபி?ஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.
* நாமக்கல், கடைவீதி சக்தி கணபதி கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகங்கள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, 10:00 மணிக்குள் நடை அடைக்கப்பட்டது.