சபரிமலை : பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு 7:30 மணிக்கு அடைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி நடை திறந்தார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலவருக்கு அபிேஷகம் செய்தார். தொடர்ந்து கணபதிேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து களப கலசத்தை மேல்சாந்தி எடுத்து கோயிலை வலம் வந்தார். களப அபிேஷகம் முடிந்து உச்சபூஜைக்குப்பின் நடை அடைக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு அத்தாழபூஜையும் நடைபெற்றன. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அடுத்து ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கிறது.