சபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கால்கடந்த பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. நடை திறக்கப்பட்டு குறைவான ஊழியர்களுடன் பூஜைகள் மட்டும் நடந்தது.மத்திய அரசு ஜூன்8ல் கோயில்களை திறக்க அனுமதித்துள்ள நிலையில் கேரளாவிலும் கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூன் 14-ல் மாலை திறக்கிறது. ஐந்து நாள் பூஜைகள் முடிந்ததும் ஜூன் 19 காலையில் கொடியேற்றத்துடன் ஆராட்டு திருவிழா தொடங்கும். பத்து நாட்கள் திருவிழாவுக்கு பின்னர் ஜூன் 28ல் இரவு நடை அடைக்கப்படும்.இந்த நாட்களில் பக்தர்களை அனுமதிக்க கேரள மாநில அரசும் தேவசம்போர்டும் முடிவு செய்துஉள்ளது. இதன் படி ஒரு நேரத்தில் சன்னிதானத்தில்50 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகக்கவசம்கண்டிப்பாக அணிய வேண்டும். நிலக்கல் மற்றும் பம்பையில் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்படும். நெய்யபிஷேத்துக்கான நெய் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பக்தர்கள் ஒப்படைக்க வேண்டும். பூஜாரிகள் நேரடியாக பிரசாதம் விநியோகிக்க கூடாது. பக்தர்கள் வருகை ஆன்லைன் வரிசை மூலம் கட்டுப்படுத்தப்படும்., என்றார்.