பதிவு செய்த நாள்
06
ஜூன்
2020
03:06
தர்மபுரி: வைகாசி விசாகத்தை முன் னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா தொற்றை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சில கட் டுப்பாடுகளுடன் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகி றது. ஆனால் கோவில், தேவா லயம் மற்றும் மசூதிகள் திறக்க அனுமதியில்லை. இந்நிலையில், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான வைகாசி விசாகம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி நெச வாளர் காலனி வேல்முருகன் கோவிலில், காலை, 7:00 மணிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட திர வியங்களால் சிறப்பு அபி?ஷேகம் செய்யப்பட்டது. பின், வள்ளி, தெய்வானை உடனான வேல் முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், தர்மபுரி எஸ்.வி.சாலை முருகன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணி சுவாமி கோவில், அன்னசாகரம் விநாயகர் வேல் முருகன் கோவில் உள்பட, மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், வைகாசி விசாகத்தை முன் னிட்டு நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந் தன. பக்தர்கள் அவரவர் வீடுகளி லேயே முருகனை வழிபாடு செய்தனர்.