பதிவு செய்த நாள்
13
ஜூன்
2020
09:06
இம்மாதம் குரு ஜூலை7க்கு பிறகு நற்பலனை வாரி வழங்குவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். அலைச்சலும், சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. சமூகத்தில் செல்வாக்கு பாதிக்கப்படலாம்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 7ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் புதனால் வீட்டில் சில பிரச்சினை வரலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பொன், பொருள் இழப்பு ஏற்படலாம். ஜூன் 17க்கு பிறகு செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
பெண்கள் வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டிற்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். ஜூலை 7க்கு பிறகு ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். ஜூன் 17க்கு பிறகு செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழில், வியாபாரத்தில் ஜூலை 7க்கு பிறகு ஆதாயம் உயரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும்.
* அரசு பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஜூலை 7க்கு பிறகு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
* ஆசிரியர்கள் ஜூலை 7க்கு பிறகு தடைகளை முறியடித்து நன்மை கிடைக்கப் பெறுவர். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்
* பொதுநல சேவகர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் மாத இறுதியில் மஞ்சள், கொண்டைக்கடலை, சோளம், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் காண்பர்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7 க்கு பிறகு கல்வியில் சிறப்புடன் திகழ்வர். ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு நிர்வாகச் செலவு அதிகரிக்கும். ஜூன்17க்கு பிறகு எதிரிகளின் இடையூறை சந்திக்க வேண்டியதிருக்கும்.
* வியாபாரிகள் அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
* தரகு, கமிஷன் தொழிலில் மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.
* தனியார் துறை பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் அவதிப்படுவர். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். சிலர் இடமாற்றத்திற்கு ஆளாவர்.
* ஐ.டி., துறையினர் விடாமுயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.
* மருத்துவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தற்காலிகமாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
* வக்கீல்கள் புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடை, பணநஷ்டம், மனதில் சோர்வு ஏற்படலாம்.
* விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடாமல் போகலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
* பால்பண்ணை தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. எதிர்பாராத செலவும் ஏற்படும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் விடாமுயற்சி தேவை. சகமாணவர்களிடம் விழிப்புடன் பழக வேண்டும்.
நல்ல நாள் ஜூன் 15,16,17,18,21,22,26,27, ஜூலை 2,3,4,5,11,12,13,14,15
கவன நாள்: ஜூலை 6,7,8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,2 நிறம்: பச்சை, வெள்ளை
பரிகாரம்:
* திங்கட்கிழமையில் சிவனுக்கு நெய் விளக்கு
* புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு
* வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு விரதம்