பதிவு செய்த நாள்
13
ஜூன்
2020
09:06
இந்த மாதம் சூரியன், சுக்கிரன், ராகு சாதகமாக இருந்து சிறப்பான பலன் தருவர். செவ்வாய் ஜூன்17க்கு பிறகும், புதன் ஜூன்20 வரையும் ஜூலை3க்கு பிறகும் நன்மை தருவார்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.
குருபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் மனக்கவலை, சுறுசுறுப்பு அற்ற நிலை ஏற்படும். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கு செல்கிறார். இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படலாம். வீண் தொல்லைகள், வீண் அலைச்சல் ஏற்படும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். புதனால் எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஜூன் 21 – ஜூலை 3 வரை கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பெண்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானத்தைக் காண்பர். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
உடல்நிலை திருப்தியளிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு படிப்படியாக லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று திகழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் காண்பர்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் வருமானம் உயரும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
* அரசு பணியாளர்கள் ஜூலை 3க்கு பிறகு கூடுதல் நன்மை காண்பர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
* ஐ.டி., துறையினருக்கு வேலையில் முக்கியத்துவம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர்.
* மருத்துவர்களுக்கு வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். வேலையில் திருப்தியுடன் ஈடுபடுவர்.
* வக்கீல்கள் ஜூலை 3க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஜூன் 17க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு ஜூன் 17க்கு பிறகு சாதகமான நிலை உருவாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* கலைஞர்களுக்கு நண்பர்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். தொழில்ரீதியான பயணம் மேற்கொள்வர்.
* விவசாயிகள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். நெல், மஞ்சள், பழ வகைகள், சோளம், கேழ்வரகு, தக்காளி மூலம் அதிக லாபத்தை காண்பர். ஜூன் 17க்கு பிறகு புதிய நிலம் வாங்கலாம். பக்கத்து நிலத்து வகையில் இருந்த தொல்லைகள் மறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* பால்பண்ணை தொழில் சிறந்து விளங்கும். கால்நடை வகையில் வருமானம் அதிகரிக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நற்பெயர் காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக திடீர் பயணம் ஏற்படலாம்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஜூன் 21 – ஜூலை 3 வரை வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
* ஆசிரியர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வீண்கவலை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு, விரோதம் முதலியன ஏற்படும்.
நல்ல நாள் ஜூன் 15,21,22,23,24,25,30 ஜூலை 1,2,3,6,7,8,11,12,13
கவன நாள் ஜூன் 26,27 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, நீலம்
பரிகாரம்:
* சனிக்கிழமை அனுமனுக்காக விரதமிருத்தல்
* திங்கட்கிழமையில் சிவபெருமான் வழிபாடு
* பவுர்ணமியன்று காளியம்மனுக்கு நெய்தீபம்