* கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும். * தர்மம் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். * லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுபடுத்துவது அவசியம். * பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியாக இருப்பவனும் முட்டாள் ஆகி விடுவான். * புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடும். * தர்மத்தில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் மற்ற எதிலும் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படாது. * தர்மத்தை முழுமையாக ஏற்று பின்பற்றுவதே கல்வி கற்றதன் அடையாளம். * வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே. * தர்ம வழியில் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு வேதம் விதித்தபடி வாழ்வு நடத்துங்கள். * தேவையற்ற பேச்சால் நேரம் வீணாவதோடு திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியாது. * கவலையில் மனதைச் செலுத்தாமல் பயனுள்ள விஷயத்தில் மட்டும் ஈடுபடுவது நல்லது. * எப்போதும் கடவுளின் திருநாமத்தை ஜபிப்பவர்களுக்கு ஒரு குறையும் ஏற்படாது. * கடவுளுக்கு நிவேதனம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது புண்ணியமாகும். * உயிருடன் இருக்கும்வரை ஒருவருடைய பிறவிக்குணம் அவரை விட்டு நீங்காது. * கடும் நியமங்கள் கொண்டதாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.