Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளை உண்மைக்கு உயர்ந்த இடம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
04:06

நேர்முகத்தேர்வு வரை போய்விட்டேன்... கடைசி நேரத்தில் எப்படியோ வேலை வாய்ப்பு தவறி விட்டது... மாப்பிள்ளை வீட்டார் என் பெண்ணையே மணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து சென்ற பிறகு திடீரென மாறி விட்டார்கள். இப்படி சந்தர்ப்பங்கள் தவறிப் போகுமானால், சீர்காழி சிவனை நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. தந்தை உடல்நலத்துடன் விளங்கவும், மனநலம் சீர்பெறவும், புண்ணியம் செய்தும் பலன் பெற முடியவில்லையே என்று தவிப்பவர்களும் இதைப் படிக்கலாம்.  

ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்துஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினைஇருநதி அவரமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம் நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனைஒருதனு இருகால் வளைய வாங்கி, முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனைஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடுஇருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து நான்மறை ஓதி, ஐவகை வேள்விஅமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி, வரன்முறை பயின்ற, எழுவான்தனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை;அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;பாணி மூவுலகும் புதைய, மேல் மிதந்ததோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதிவாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,மறைமுதல் நான்கும்மூன்று காலமும், தோன்ற நின்றனை;இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்மறுஇலா மறையோர்கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;அனைய தன்மையை ஆதலின், நின்னைநினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar