Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒற்றைக்கால் கொண்ட சிவன்! வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பினால் நன்மை நடக்கும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
04:06


அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்கிறது வேதவசனம் (யோவான் 2:5)  தாய்மரியாளுடன், இயேசுவும் அவருடைய சீடர்களும் கானா என்ற ஊரில் ஒரு திருமணத்திற்கு சென்றனர். எபிரேயர்களின் திருமணச் சடங்கில் திராட்சை ரசம் பரிமாறுவது வழக்கம். தோட்டத்தில் இருந்து கொண்டு வந்த திராட்சை பழங்களை நீரில் நன்றாக கழுவி, பெரிய தொட்டிகளில் இட்டு கால்களால் மிதிப்பர். அப்போது பெருகும் ரசத்தை, சிறிய கால்வாய் வழியாக, தொட்டிகளில் சேகரிக்கப்பர். சக்கையை செக்கில் ஆட்டி, அதிலும் ரசத்தை பிழிந்தெடுப்பர். தொட்டிகளில் சேகரித்த ரசத்தை பெரிய கல் ஜாடிகளில் ஊற்றுவர். புளிப்பதற்கு முன்பாக உபயோகப்படுத்தி விடுவர்.

புளித்தால், அது மதுபானமாக மாறி விடும். இப்படி மதுவாக குடிக்கும் சிலரும் உண்டு. திருமண வீட்டிற்கு, எதிர்பார்த்ததை விட  அதிகமானவர்கள் வந்து விட்டதால், திராட்சை ரசத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மணவீட்டார் மரியாளிடம் இந்த விஷயத்தை தெரிவித்தனர். உடனே திராட்சை ரசம் பரிமாறுவோரை அழைத்த இயேசு, ஆறு கல் ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார். எபிரேயர்களுக்கு எண்களில் ஆறு மிகவும்  முக்கியத்துவம் பெற்றது. ஆறுநாட்களில் உலகத்தைப் படைத்த தேவன், ஏழாம் நாளில் ஓய்வு எடுத்ததாக ஆதியாகமம் முதலாம் அதிகாரம் கூறுகிறது. தேவன் மனிதனுக்காக உழைத்த ஆறு நாட்களை நினைவுபடுத்தும் வகையில், ஆறு கல் ஜாடிகளை எபிரேயர்கள் பயன்படுத்துவர். ஜாடியில் ஊற்றிய தண்ணீர், திராட்சை ரசமாக மாறியது. இது வேலைக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இயேசு செய்த முதல் அற்புதம் இதுவே. தேவன் சொல்வதை முழுமையாக நம்பினால், அற்புதங்களை வாழ்வில் காண முடியும். விஞ்ஞான அறிவு, சிந்தித்து முடிவெடுக்கும் யோசனை அல்லது வேறு விதமான உதாரணங்கள், ஆராய்ச்சி முடிவு ஆகியவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இயேசு செய்த அற்புதத்தின் காரணமாக, அவருடைய சீஷர்களும் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் என்கிறது வேதவசனம். (யோவான் 2;11) தேவனின் வார்த்தையை நம்பினால் நன்மை நமக்குத் தான்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar