* பணிவுள்ளவன் அனைவரின் அன்புக்குரியவனாகி வெற்றி இலக்கை அடைவான். * கடவுள் நமக்கு அருள் புரிவதில் நிகரற்ற தன்மை கொண்டவர். * இவன் சிறியவன்; இவனால் என்ன பயன் என யாரையும் அவமதிப்பது கூடாது. * சாப்பிடும் போது அவசரமோ, நிதானமோ காட்ட வேண்டாம். * செய்த பாவங்களை பிறரிடம் சொல்வதால் பாவம் குறையும். * எல்லா உயிர்களையும் போற்றி வாழ்தலே சிறந்த அறமாகும். * தன்னைத்தானே சுயசோதனை செய்பவன் தீமையிலிருந்து விலகி நன்மை அடைவான். * இந்தப் பிறவியில் செய்யும் நற்செயலின் பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும். * எல்லாம் தெரிந்தவரோ, ஏதும் தெரியாதவரோ உலகில் ஒருவரும் இல்லை. * வீரம், புகழ் இன்றி நீண்டகாலம் வாழ்வதை விட இவற்றுடன் சிலகாலம் வாழ்வது சிறப்பு. * நல்லவன், கெட்டவன் என்பது ஒருவனின் மனதைக் கொண்டு முடிவு செய்தல் வேண்டும். * மற்றவரைக் கெடுத்து வாழாமல் நல்வழியில் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். * கோபத்தோடு வருபவனிடம் கூட குளிர்ந்த முகத்துடன் பேசினால் கோபம் தணிந்துவிடும். * மழைநீர் போல மனிதன் யாருடன் சேர்கிறானோ அவனது குணத்தையே பெறுகிறான். * படித்தவர், பணக்காரர், வயது முதிர்ந்தோர் எல்லாம் பெரியவர்கள் அல்ல. பிறர் குற்றம் பேசாதவரே பெரியவர்கள். * ஒழுக்கம் ஒன்றே விலங்கு நிலையில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.