ஆப்பிரிக்கா நாடான மாலியை ஆட்சி செய்த மன்சா பணக்கார மனிதராகக் கருதப்படுகிறார். இவரது இயற்பெயர் மூசா கெய்ட்டா. முடிசூட்டப்பட்ட பிறகு மன்சா என்று அழைக்கப்பட்டார். இதற்கு ‘மன்னர்’ என்பது பொருள். பன்னிரண்டாம் நுாற்றாண்டில் மாலியை ஆட்சி செய்த மூசா காலத்தில் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைய கிடைத்தன. உலகம் முழுவதும் தங்கத்திற்கான தேவை உச்சத்தில் இருந்தது. தற்போதைய செனகல், காம்பியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர், நைஜீரியா ஆகியவை இவரது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் .இவர் கட்டிய பல மசூதிகள் இன்னும் உள்ளன. இவருக்கு 400,000 மில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. புனித நகரமான மெக்காவுக்கு மன்சா மூசா இவர் பயணம் செய்த போது அவருடன் 60 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அத்துடன் 80 ஒட்டகத்தில் 136 கிலோ தங்கத்தையும் அவர்கள் கொண்டு சென்றனர். மூசா மிகவும் தாராள மனம் படைத்தவர். எகிப்து தலைநகரான கொய்ரோவை கடக்கும் போது, அங்கிருக்கும் ஏழைகளுக்குத் தங்கத்தை தானமாக வழங்கினார் மூசா. மாலி, ஆப்பிரிக்காவில் பள்ளிக்கூடங்கள், நுாலகங்களைக் மூசாக கண்டினார். நூலகங்களையும் தன் ஆட்சி காலத்தில் மூசா கட்டினார். 25 அண்டுகள் மன்னராக இருந்த மூசா 1337ல் மரணமடைந்தார்.