1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257வது திருத்தந்தையாக இருந்தவர் புனித பத்தாம் பயஸ். இயற்பெயர் குயிசெபே மெல்கொரி சார்தோ. ஐந்தாம் பயஸுக்கு பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தை இவரே. திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்தார்.
இவர் காலத்தில் தான் திருச்சபை சட்ட தொகுப்பு வெளியிடப்பட்டது. தனிமனித வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடிக்க ஊக்குவித்தார்.மரிய அன்னையிடம் பக்தி கொண்டவராக விளங்கினார். இவர் அறிக்கையில், ‘‘மரியாளின் வழியாக யாவற்றையும் புதுப்படைப்பாக்க’’ என்னும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.1908-இல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை இத்தாலிய அரசு உதவும் முன்பாக தாமே பணியில் இறங்கினார். மக்களை திருத்துாதரக அரண்மனையில் தங்க வைத்தார். இவர் தன் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரது சகோதரரின் மகன் கடைசி வரை கிராமத்தில் பங்கு குருவாகவே இருந்தார். இவரது மூன்று சகோதரிகள் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். ‘‘நான் ஏழையாக பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே சாக விரும்புகிறேன்’’ என அடிக்கடி குறிப்பிடும் இவர் இறப்புக்கு பின் புனிதர் பட்டம் பெற்றார்.