Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மிகச் சிறந்த தருணம் காலம் மாறலாம்! நம் தர்மம் மாறுமா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழ்மையை விரும்பி ஏற்றவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
05:07

1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257வது திருத்தந்தையாக இருந்தவர் புனித பத்தாம் பயஸ். இயற்பெயர் குயிசெபே மெல்கொரி சார்தோ. ஐந்தாம் பயஸுக்கு பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தை இவரே. திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்தார்.


இவர் காலத்தில் தான் திருச்சபை சட்ட தொகுப்பு வெளியிடப்பட்டது. தனிமனித வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடிக்க ஊக்குவித்தார்.மரிய அன்னையிடம் பக்தி கொண்டவராக விளங்கினார். இவர் அறிக்கையில், ‘‘மரியாளின் வழியாக யாவற்றையும் புதுப்படைப்பாக்க’’ என்னும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.1908-இல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை இத்தாலிய அரசு உதவும் முன்பாக தாமே பணியில் இறங்கினார். மக்களை திருத்துாதரக அரண்மனையில் தங்க வைத்தார். இவர் தன் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரது சகோதரரின் மகன் கடைசி வரை கிராமத்தில் பங்கு குருவாகவே இருந்தார். இவரது மூன்று சகோதரிகள் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். ‘‘நான் ஏழையாக பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே சாக விரும்புகிறேன்’’ என அடிக்கடி குறிப்பிடும் இவர் இறப்புக்கு பின் புனிதர் பட்டம் பெற்றார்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar