தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவில் கொரோனா எதிரொலியாக மூடப்பட்ட நிலையில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்,மஞ்சள்,சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு வழங்கி வழிபாடு வழக்கம். இந்நிலையில், கொரோனா எதிரொலியாக கடந்த மார்ச்.18ம் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைக்கள் நடந்து வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே பிரதோஷ வழிபாட்டை நடத்தினர்.